Cinema
போதையில் கார் ஓட்டிய தமிழ் பட இயக்குநர்.. பறிமுதல் செய்யப்பட்ட கார்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை !
கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் வெளியான 'குலேபகாவலி' படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கல்யாண். அதன்பிறகு நடிகைகள் ஜோதிகா மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான 'ஜாக்பாட்' படத்தையும் இயக்கியுள்ளார். அதன்பின் 'கோஷ்டி', 'ஜல்சா' ஆகிய படங்களை இயக்குநர் கல்யாண் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள டி.டி.கே சாலையில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர் இவரது காரை மறித்து சோதனை செய்தனர்.
பின்னர் அவரை சோதனை செய்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதித்ததோடு, அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட காரை தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சொன்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
Also Read
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” : அமைச்சர் மா.சு!
-
“நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும்!” : அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!