Cinema
போதையில் கார் ஓட்டிய தமிழ் பட இயக்குநர்.. பறிமுதல் செய்யப்பட்ட கார்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை !
கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் வெளியான 'குலேபகாவலி' படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கல்யாண். அதன்பிறகு நடிகைகள் ஜோதிகா மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான 'ஜாக்பாட்' படத்தையும் இயக்கியுள்ளார். அதன்பின் 'கோஷ்டி', 'ஜல்சா' ஆகிய படங்களை இயக்குநர் கல்யாண் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள டி.டி.கே சாலையில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர் இவரது காரை மறித்து சோதனை செய்தனர்.
பின்னர் அவரை சோதனை செய்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதித்ததோடு, அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட காரை தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சொன்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
Also Read
-
Epstein Files... மோடியால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நிலைமை என்ன? - புட்டு புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி!
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!