Cinema
'ரோஜா' தொடரின் வசனகர்த்தா திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரை ரசிகர்கள் !
தமிழில் முன்னணி இயக்குநரான கங்கை அமரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் சித்து (வயது 60). இவர் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் துணையாக இருந்துள்ளார்.
இதையடுத்து 1997-ம் ஆண்டு விக்னேஷ், தேவயானி, கரண் ஆகியோர் நடிப்பில் வெளியான 'காதலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து மன்சூர் அலிகானை கதாநாயகனாக வைத்து இயக்கிய ஒரு படம் பல்வேறு காரணங்களுக்காக இறுதி வரை வெளிவரவில்லை.
பின்னர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 'ரோஜா' உள்ளிட்ட பல்வேறு தொடர்களுக்கு வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் இருந்துள்ளார். மேலும் முன்னணி இயக்குநர் பாரதிராஜாவை விவசாயியாக நடிக்க வைத்து 'கடைமடை' என்னும் பெயரில் கிராமத்து படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த நேற்று திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதையடுத்து சிந்துவின் உடலை அவரது சொந்த ஊருக்கு அஞ்சலிக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!
-
அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்காத சபாநாயகர்!
-
“Faceless People எனும் ஆவணப்படத்தைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!