Cinema
"இந்தி சினிமா குழப்பத்தில் இருக்க காரணமே இந்த படம்தான்" - பிரபல இயக்குனர் விமர்சனம் !
கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறை இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த படம் பாகுபலி. அனுஷ்கா, பிரபாஸ், தமன்னா, சத்யராஜ், ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்புல வெளிந்த இந்த படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
அதன்பின்னர் 2017-ம் ஆண்டு வெளியான பாகுபலி-2 படம் பாகுபலியின் முதற்பாகத்தின் வெற்றியை விட மிகபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் தெலுங்கு சினிமா மீதான பார்வையை ஒட்டுமொத்தமாக மாற்றியது.
அதுவரை இந்தி படங்களே இந்திய படங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், அந்த நிலையை பாகுபலி மாற்றியது. அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருந்து வெளிவந்த KGF,RRR, விக்ரம் போன்ற படங்கள் இந்தி பேசும் மாநிலங்களில் பெரும் வெற்றியை பெற்றது.
அதேநேரம் முன்னணி நாயகர்கள் நடிப்பில் வெளியான இந்தி படங்கள் விமர்சன ரீதியாகும், வசூல் ரீதியாகும் பெரும் தோல்வி அடைந்தது. இதனால் தென்னிந்திய படங்கள் குறித்த பார்வை இந்திய அளவில் எழுந்தது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் போன்றோர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். பாகுபலி திரைப்படம் தொடர்பாக பேசிய அவர், "பாலிவுட்டின் மிகப் பெரிய இயக்குநர் ஒருவர், 'KGF 2 படத்தை பார்க்க 5 முறை முயன்றேன். அரை மணி நேரத்துக்கு மேல் முடியவில்லை. அந்தப் படத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் வெற்றியைப் புறக்கணித்துவிட முடியாது.
லாஜிக் இல்லாத அந்தப் படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. இந்த வெற்றியால் இந்தி சினிமாத் துறை குழப்பத்தில் இருக்கிறது. அதற்காக எனக்கு இந்தப் படம் பிடிக்காமல் இல்லை. அதுபற்றி சொல்ல சரியான வார்த்தை கிடைக்கவில்லை'' எனக் கூறினார்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!