Cinema
“பெண்களை மட்டமாக எடைபோடுவதை நிறுத்துங்கள்” : ஆடை குறித்த விமர்சனத்திற்கு நடிகை சமந்தா பதிலடி !
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவில் இவர் பச்சை நிற உடை ஒன்றை அணிந்திருந்தார்.
இந்த உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைத் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் அவர் அணிந்திருந்த ஆடை குறித்து விமர்சனங்களை எழுப்பினர். இதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவரது சமூகவலைத்தள பதிவில், "பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடைபோடுவதை முதலில் அனைவரும் நிறுத்துங்கள். இனம், படிப்பு, சமூகம், நிறம் என அவர்களை அடையாளப்படுத்தும் பெரிய பட்டியலே அங்கு உள்ளது.
நாம் 2022ல் இருக்கிறோம். இப்போதும் பெண்களின் உடையை வைத்து அவர்களை அடையாளப்படுத்துகிறோம். இதை நிறுத்துங்கள். அவர்களின் உடையை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரின் இந்த சமூக வலைத்தளப் பதிவு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் நடிகர்கள் பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
Also Read
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!
-
33.43 ஏக்கர் பரப்பளவில்.. ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட நாவலூர் ஏரி... இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
-
மக்களவையில் பேசவிடாமல் தொடர்ந்து தடுக்கப்பட்ட ராகுல் காந்தி… சர்வாதிகாரம் செய்யும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம் ஆனால்… பாகிஸ்தானின் முடிவுதான் என்ன!
-
உங்களின் Favourite Destination தமிழ்நாடு : உலக மக்களுக்கு முதலமைச்சர் சொன்ன வேண்டுகோள்!