Cinema
’வேட்டிய கட்டினா ஜட்ஜே நான்தான்’ - பொறி பறக்கும் வசனங்களுடன் வெளியானது எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது எதற்கும் துணிந்தவன் படம். சூர்யாவின் 40வது படமாக உருவாகியுள்ள இதில் வினய், சத்யராஜ், பிரியங்கா அருள் மோகன், சரண்யா பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மார்ச் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளிலும் வெளியாக இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. டி.இமான் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் நாயகனாக வருகிறார் சூர்யா. பெண்கள் மீதான சமூகத்தின் அலட்சியத் தன்மையை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வசனங்கள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது.
அதில், “இந்த ஊருக்கு வாய் மட்டும்தான் இருக்கும், காது இருக்காது , பொண்ணுங்கனாலே பலவீனமானவங்கனு நினைச்சுட்டு இருக்காங்க, இல்ல பலம்னு ஆக்கனும்” போன்ற வசனங்கள் வரவேற்பை பெற்று வருகிறது.
வெகு நாட்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ட்ரெய்லரை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Also Read
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!