Cinema
ராஜா ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான் : இளையராஜா வெளியிட்ட புதிய அறிவிப்பு!
தமிழ் திரையிசையின் தனிப்பெரும் ஆளுமையாக இருந்து வருகிறார் இசைஞானி இளையராஜா. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளிலும் அவர் இசையமைத்துள்ளார்.
ஆயிரத்து நானூறுக்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து தனது இசையால் பலரை கட்டிப்போட்டுள்ளார். இவைதவிர தனிப்பாடல்களாகவும் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.
இசைஞானி இளையராஜாவின் தனி இசைப்பாடல்கள் பல ரசிகர்களின் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றவை. அந்தவகையில் 'How to Name It?' இசை ஆல்பம் இளையராஜாவால் 1986ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இளையராஜாவின் 'How to Name It?' கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்குரியது. அதன் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார் இளையராஜா.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இசைஞானி இளையராஜா, “திரைபடங்களில் தொடர்ச்சியாக பல பாகங்கள் வருவதைப் போல ஏன் இசையிலும் வரக்கூடாது? How to Name It? -02 விரைவில் வரப்போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!