Cinema
“இந்த உணவை இங்கே எடுத்து வரக்கூடாது”: மும்பை ஸ்டார் ஓட்டலின் மனிதாபிமானமற்ற செயல் - மலையாள நடிகை ஆவேசம்!
'ஒரு அடார் லவ்' படத்தின் மூலம் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இதையடுத்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் 'செக்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனால் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.
இதையடுத்து, படப்பிடிப்பு முடித்துவிட்டு உணவகம் ஒன்றில் இரவு உணவு வாங்கிக் கொண்டு விடுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விடுதி ஊழியர்கள் வெளியே வாங்கி வந்த உணவை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என கூறியுள்ளனர்.
நட்சத்திர விடுதியின் இந்த நடவடிக்கை கண்டித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் "படப்பிடிப்பு முடித்து உணவகம் ஒன்றில் உணவு வாங்கி விடுதிக்குச் சென்றேன்.
அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் வெளியே வாங்கிய உணவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இதை நீங்கள் வெளியே சாப்பிட்டு வரவும் அல்லது குப்பியில் போடுங்கள் என கூறினர். உணவு வீணாக்கக் கூடாது என்பதால் வெளியே சென்று உணவை சாப்பிட்டு விட்டு விடுதிக்கு வந்தேன்.
நட்சத்திர விடுதியின் இந்த மனிதாபிமானமற்ற செயல் எனக்கு வியப்பை கொடுக்கிறது” என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த விடுதிக்கு அவரின் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
🔴LIVE | கரூர் துயரம் - பேரவையில் காரசார விவாதம்... பழனிசாமியை கேள்விகளால் துளைத்தெடுக்கும் அமைச்சர்கள்!
-
முன்பதிவு பெட்டியில் உரிய டிக்கெட் இல்லாமல் ஏறினால் இனி நடவடிக்கை - தெற்கு ரயில்வே உத்தரவு !
-
“அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம்; மக்களின் உயிர் விலைமதிப்பற்றது”: பேரவையில் முதலமைச்சர் பேச்சு!
-
"சி.பி.ஐ RSS-BJP-ன் கைப்பாவை என்று சொன்ன விஜய் இன்று அதன் கைப்பாகையாகிவிட்டார்" - முரசொலி விமர்சனம் !
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!