Cinema
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.26 லட்சத்தை இழந்த நடிகை : மோசடி கும்பலிடம் சிக்கியது எப்படி - நடந்தது என்ன?
அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி ரூ. 26 லட்சம் பண மோசடி செய்ததாகத் தனியார் நிறுவனம் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர், தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நடிகை சினேகாவிடம் கூறியுள்ளனர்.
மேலும் ரூ. 26 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிடைக்கும் என்றும் அவரிடம் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் ரூ. 25 லட்சத்தை ஆன்லைன் மூலமாகக் கொடுத்துள்ளார்.
அதேபோல் ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு வீட்டில் நேரில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் ஒரு மாதம் கழித்து அவர்களிடம் வட்டி தொகையைக் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் வட்டி தரமறுத்துள்ளனர். மேலும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து சினேகா நம்பவைத்து பணமோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் மீது கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!