Cinema
"பாலிவுட்டில் தலைவிரித்தாடும் இனவெறி" : நடிகர் நவாசுதீன் சித்திக் 'பகீர்' குற்றச்சாட்டு!
பாலிவுட் சினிமாவில் நிறப் பாகுபாடு இருப்பதாகவும், கருப்பாக இருக்கும் பெண்கள் நாயகியாக நடிக்க முடியாது என்றும் அண்மையில் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் நவாசுதீன் சித்திக்கும் பாலிவுட் சினிமாவில் இனவெறி, நிறப் பாகுபாடு இருப்பதாகக் கூறியிருப்பது சினிமா உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்துப் பேசிய நடிகர் நவாசுதீன் சித்திக், "பாலிவுட் சினிமாவில் நட்புறவு இல்லை. இனவெறி தான் இங்கு அதிகமாக இருக்கிறது. ஒரு நடிகை கறுப்பாக இருந்தால் ஒதுக்கிவிடுகிறார்கள்.
நான் உயரம் குறைவாக இருப்பதால் பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டேன். இதை எதிர்த்து நான் தொடர்ந்து போராடிக்கொண்டே சினிமாவில் இந்த அளவிற்கு வந்துள்ளேன்.
எனது நடிப்பால் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். பல பெரிய நடிகர்களும் இப்படியான இனப் பாகுபாடுகைளை சந்தித்துள்ளனர். இதை நான் ஒரு புகாராக தற்போது சொல்லவில்லை. சிறந்த திரைப்படங்கள் உருவாக வேண்டும் என்பதாலேயே இதைப் பற்றி இப்போது சொல்கிறேன்.
நன்றாக நடித்தால் யாரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நல்ல திரைப்படங்களை உருவாக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!