Cinema
தெலுங்கு 'ராட்சசன் 2'-நாயகன் இவரா?... தனுசுக்கு தம்பியாகும் பிரபல நடிகர்! #CINEUPDATES
தெலுங்கில் உருவாகவிருக்கும் ‘ராட்சசுடு 2’ ...
‘ராட்சசன்’ படத்தை ‘ராட்சசுடு’ எனும் தலைப்பில் தெலுங்கில் ரமேஷ் வர்மா ரீமேக் செய்திருந்தார். பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸும், அனுபமா பரமேஸ்வரனும் நடித்திருந்தனர். சத்யநாராயண கொனரு படத்தைத் தயாரித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தை ‘ராட்சசுடு 2’ எனும் தலைப்பில் உருவாகவுள்ளது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த பாகத்தின் நடிகர்கள் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் படத்தின் ஹீரோ குறித்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் ரமேஷ் வர்மா, ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம். இவர் சமீபத்தில் சென்னை வந்து விஜய் சேதுபதியை சந்தித்து கதை கூறியுள்ளார். அதுனால் ‘ராட்சசுடு 2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என தகவல்கள் வருகிறது. ஏற்கனவே தமிழ் தெலுங்கு என அடுக்கடுக்காக படங்கள் ஒப்பந்தமாகிவரும் விஜய் சேதுபதி இந்த த்ரில்லர் படத்திலும் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்!
இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் பத்து வருடங்கள் கழித்து புதிய படம் ஒன்று தயாராக உள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. ‘நானே வருவேன்’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளது.
இதற்கு ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என பரவலாக பேசப்படுகிறது. இந்த படத்திற்கான கதை இராயபுரத்தில் நடக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் தனுஷுக்கு தம்பியாக விஷ்ணு விஷால் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அது தனுஷின் பிறந்த நாளான வரும் 28ஆம் தேதி வெளியாகளாம் எனவும் கூறப்படுகிறது.
Also Read
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - விவரம் உள்ளே!
-
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதியை கட்ட தடை கோரி வழக்கு : அபாரதத்துடன் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
-
பீகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு... - அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு !
-
திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!