Cinema
கதை பிடிக்காததால் இயக்குநர் வம்சியைத் தவிர்க்கும் நடிகர் விஜய்?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் தொடங்க இருக்கிறது. சென்னையில், பிரம்மாண்டமான மால் செட் போட்டு படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.
இந்நிலையில், இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள் உலாவருகிறது. அதன்படி, தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்க விஜய் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இயக்குநர் வம்சி அளித்த ஒரு பேட்டியில் கூட இதைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இப்போது விஜய் அந்த இயக்குநரோடு பணிபுரிய மாட்டார் என சொல்கிறது கோலிவுட் வட்டாரம்.
ஏன் என்றால், இயக்குநர் வம்சி, முழுக்கதையும் சொல்லாமல் மையக்கதை மற்றும், படம் எப்படி இருக்கப் போகிறது என மட்டும் தான் சொல்லிருக்கிறார். அதில், முழுமையா திருப்தி அடையாத விஜய், முழு திரைக்கதையை உருவாக்குங்கள் என சொல்லி இருக்கிறார். அவரோ, திரைக்கதை உருவாக்கத்துக்கு முன்பாக அதைப்பற்றிப் பொதுவெளியில் பேசிட்டது, விஜய்க்கு சுத்தமா பிடிக்கவில்லையாம். அதனால், தெலுங்கு இயக்குநர் வேண்டாம் என விஜய் சொல்லிட்டடார் என தகவல்கள் உலவுகிறது
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!