Cinema
கதை பிடிக்காததால் இயக்குநர் வம்சியைத் தவிர்க்கும் நடிகர் விஜய்?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் தொடங்க இருக்கிறது. சென்னையில், பிரம்மாண்டமான மால் செட் போட்டு படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.
இந்நிலையில், இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள் உலாவருகிறது. அதன்படி, தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்க விஜய் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இயக்குநர் வம்சி அளித்த ஒரு பேட்டியில் கூட இதைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இப்போது விஜய் அந்த இயக்குநரோடு பணிபுரிய மாட்டார் என சொல்கிறது கோலிவுட் வட்டாரம்.
ஏன் என்றால், இயக்குநர் வம்சி, முழுக்கதையும் சொல்லாமல் மையக்கதை மற்றும், படம் எப்படி இருக்கப் போகிறது என மட்டும் தான் சொல்லிருக்கிறார். அதில், முழுமையா திருப்தி அடையாத விஜய், முழு திரைக்கதையை உருவாக்குங்கள் என சொல்லி இருக்கிறார். அவரோ, திரைக்கதை உருவாக்கத்துக்கு முன்பாக அதைப்பற்றிப் பொதுவெளியில் பேசிட்டது, விஜய்க்கு சுத்தமா பிடிக்கவில்லையாம். அதனால், தெலுங்கு இயக்குநர் வேண்டாம் என விஜய் சொல்லிட்டடார் என தகவல்கள் உலவுகிறது
Also Read
-
“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!
-
“இதுதான் உண்மையான சமநீதி - சமூகநீதி” : ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் குறித்து முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!
-
"இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் சாத்தான் வேதம் ஓதும் பழனிசாமி" : ஆர்.எஸ். பாரதி பதிலடி!
-
திமுக சார்பில் அஜித்குமார் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கிய அமைச்சர்: வீட்டுமனை பட்டா - பணி நியமன ஆணை!
-
”ChatGPT-யை முழுமையாக நம்ப வேண்டாம்” : பயனர்களுக்கு OpenAI தலைவர் சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை!