Cinema
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... நாளை முடிவுகள் அறிவிப்பு!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கியுள்ளனர். இந்தச் சங்கத்திற்கு பாரதிராஜா தலைவராக உள்ளார். இந்தச் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் எவரும் இன்று நடக்கும் தேர்தலில் போட்டியிடவில்லை.
இன்று நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு 'தயாரிப்பாளர் பாதுகாப்பு அணி'யின் டி.ராஜேந்தர், 'தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி'யின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, சுயேட்சையாக பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.
மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடுகின்றனர்.
முன்பு நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால், இந்த முறை வாக்கு எண்ணிக்கை நாளை காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! : எங்கு? எப்போது?
-
“கழக அரசுக்கும், மீனவர்களுக்குமான உறவு கடலைப் போலவே ஆழமானது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி 4 தொழிலாளர் விரோத சட்டங்கள் அமல் : ஒன்றிய பா.ஜ.க அரசின் அராஜகம்!
-
”விவசாயிகளின் கண்ணீரை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி” : செல்வப்பெருந்தகை ஆவேசம்!
-
சென்னையில் ரூ.89.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 584 குடியிருப்புகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!