Cinema
மீண்டும் முற்றிய வடிவேலு-சிங்கமுத்து விவகாரம்: நடிகர் சங்கத்தில் அவதூறு புகார்!
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத, மறுக்கப்படாத அடையாளமாக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. கடந்த 2 ஆண்டுகளாக திரையில் தோன்றாவிட்டாலும், சமூக வலைதளங்களில் பரவும் மீம்ஸ்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
அவ்வப்போது, பேட்டிகளில் மட்டுமே தென்பட்டு, தனக்கே உரிய பாணியில் பேசி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் நடிகர் வடிவேலு.
இந்நிலையில், கொரோனா காலம் என்பதால், வீடியோ கான்ஃப்ரன்ஸ் உள்ளிட்டவற்றின் மூலம் நடிகர்கள் பேட்டியளிப்பது வழக்கமாகி வருகிறது. அவ்வகையில், நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து வடிவேலு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சர்ச்சையை கிளப்பும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனையறிந்த நடிகர் வடிவேலு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி நடிகர்கள் சிங்கமுத்து மற்றும் மனோபாலா இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண் 13ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி புகார் கடிதம் ஒன்றை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு எழுதியுள்ளார்.
ஏற்கெனவே சிங்கமுத்துவுக்கும், வடிவேலுவுக்கும் இடையே நிலம் தொடர்பான தகராறு இருக்கிறது. நீதிமன்றத்திலும் அந்த விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
Also Read
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!
-
விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. இறுதியில் திக் திக்.. வெற்றி பெற்றது யார்? - விவரம்!
-
CAMPA Energy : அஜித்திற்கு எதிராக திரும்பிய ரசிகர்கள்… இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு... இதுதான் காரணமா?
-
பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டிலான இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சி மையம்!” : முதலமைச்சரின் 2 அதிரடி அறிவிப்புகள்!