Cinema
நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி ரெய்டு - முன்கூட்டியே கணித்த ‘இவன் தந்திரன்’ !
'பிகில்' பட விவகாரம் தொடர்பாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிரடியாக விஜய்யை அழைத்துச் சென்று அவரது வீட்டில் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தி சோதனை மேற்கொண்டது வருமான வரித்துறை. இது தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல, ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரத்துக்கு சொந்தமான இடங்களிலும், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதில், ஏ.ஜி.எஸ் மற்றும் அன்புச்செழியனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.77 கோடி ரொக்கமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டில் 8க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 15ம் தேதி ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதை அடுத்து இன்று விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமாருக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன் தினம் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.
‘பிகில்’, ‘சர்க்கார்’ பட இசை வெளியீட்டின்போது ஆளுங்கட்சியை விமர்சித்து விஜய் பேசியது அ.தி.மு.கவினரை கடுப்பேற்றியதால் இந்த முறை மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டை தடுப்பதற்காக ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் திட்டமிட்டுள்ளதாக கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ‘இவன் தந்திரன்’ முன்கூட்டியே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!