Cinema
“விஜயுடன் இணைய விருப்பம்; ஆனால் வேறு பரிமாணத்தில்” - எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவல்!
தமிழ் சினிமாவுக்கு விஜய் எனும் நடிகரை நாளைய தீர்ப்பு படத்தின் அறிமுகப்படுத்தி வைத்த இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், மீண்டும் விஜயுடன் படத்தில் பணிபுரிய விருப்பமுள்ளதாக கூறியுள்ளார்.
இயக்குநர், நடிகரை அடுத்து தயாரிப்பு களத்தில் இறங்கியுள்ள எஸ்.ஏ.சி, தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் கேப்மாரி என்ற படத்தை தயாரித்துள்ளார். இது தொடர்பாக இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் எஸ்.ஏ.சி.
அப்போது பேசிய அவர், தனது மகனான விஜய்யை வைத்து மீண்டும் படம் எடுக்க விருப்பமுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இயக்குநராக இல்லாமல் தயாரிப்பாளராக விஜயை வைத்து படம் எடுக்கும் எண்ணம் உள்ளது என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் கடந்த 2009ல் வெளியான ஆதி படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!