Cinema
“இதைப் பற்றிப் பேச கூச்சப்படாதீர்கள்” - பெண்களுக்கு நடிகை வரலட்சுமி அட்வைஸ்!
சென்னை விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய ஆணையகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் ஒரு மாதத்திற்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை வரலட்சுமி, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
அதில், “பொதுவாக பெண்கள் மார்பக உபாதைகள் குறித்து வெளியே பேச தயங்குவார்கள். மார்பகம் என்பது உடலின் மற்ற உறுப்புகளைப் போன்ற ஓர் அங்கம் தான். அதில் ஏற்படும் பிரச்னைகளை கூச்சப்படாமல் தங்களுடைய தாய், சகோதரிகளிடம் வெளிப்படையாக பேச வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும்.”
“மார்பகம் என்றதுமே அது தொடர்பாக யாரிடமும் பேசிவிடக்கூடாது என்ற மனநிலையிலேயே பெருவாரியான பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களுக்கு எப்படி உடலில் சில உறுப்புகள் உள்ளதோ அது போலவே பெண்களுக்கும் மார்பகம்.”
“சென்னை விமான நிலையத்தில் இந்த மார்பக புற்றுநோய் நிகழ்ச்சி ஒரு மாதத்திற்கு நடக்கும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் மார்பக புற்றுநோய் குறித்து அறிந்துகொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் அறிகுறி தென்பட்டால் கட்டாயம் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என பெண்களுக்கு அறிவுறுத்திய வரலட்சுமி, புற்றுநோய் என்பது குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான் எனவும் தெரிவித்தார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!