Cinema
“இதைப் பற்றிப் பேச கூச்சப்படாதீர்கள்” - பெண்களுக்கு நடிகை வரலட்சுமி அட்வைஸ்!
சென்னை விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய ஆணையகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் ஒரு மாதத்திற்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை வரலட்சுமி, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
அதில், “பொதுவாக பெண்கள் மார்பக உபாதைகள் குறித்து வெளியே பேச தயங்குவார்கள். மார்பகம் என்பது உடலின் மற்ற உறுப்புகளைப் போன்ற ஓர் அங்கம் தான். அதில் ஏற்படும் பிரச்னைகளை கூச்சப்படாமல் தங்களுடைய தாய், சகோதரிகளிடம் வெளிப்படையாக பேச வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும்.”
“மார்பகம் என்றதுமே அது தொடர்பாக யாரிடமும் பேசிவிடக்கூடாது என்ற மனநிலையிலேயே பெருவாரியான பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களுக்கு எப்படி உடலில் சில உறுப்புகள் உள்ளதோ அது போலவே பெண்களுக்கும் மார்பகம்.”
“சென்னை விமான நிலையத்தில் இந்த மார்பக புற்றுநோய் நிகழ்ச்சி ஒரு மாதத்திற்கு நடக்கும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் மார்பக புற்றுநோய் குறித்து அறிந்துகொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் அறிகுறி தென்பட்டால் கட்டாயம் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என பெண்களுக்கு அறிவுறுத்திய வரலட்சுமி, புற்றுநோய் என்பது குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான் எனவும் தெரிவித்தார்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!