Cinema
இந்தக் கூட்டணியாவது நடிகர் விக்ரமுக்கு வெற்றியைத் தருமா? - உறுதியான அடுத்த பட தகவல்!
கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி தயாரிப்பாளர் முதல் விநியோகிஸ்தர்கள் வரை அனைவருக்கும் லாபகரமான திரைப்படமாக அமைந்தது ‘கோமாளி’. காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்திருந்த இந்தப் படத்தில் யோகிபாபு, ஷாரா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
90’ஸ் கிட்ஸின் பிடித்தமான பல விஷயங்களை திரட்டிக்கொடுத்த இந்த படத்திற்கு மக்களும் நல்ல வரவேற்பை கொடுத்தனர். படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரதீப்புக்கு புது கார் ஒன்றும் பரிசாக வழங்கிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கவிருக்கும் இரண்டாவது படத்தையும் தயாரிக்க ஐசரி கணேஷ் முன்வந்துள்ளார். இந்த வெற்றிக்கூட்டணியில் ஹீரோவாக நடிக்க நடிகர் விக்ரம் ஒந்தமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறுகிய காலத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகளை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விக்ரம் தற்போது 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் ‘மகாவீர் கர்ணா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். வரலாற்றுத் திரைப்படமான அது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!