Cinema
மீண்டும் தொடங்கும் ‘மாநாடு’ - தயாரிப்பாளருடன் சமரசம் ஆனாரா சிம்பு?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் ‘மாநாடு’. அரசியலை மையமாகக் கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
திடீரென மாநாடு படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். மேலும், மாநாடு படம் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலேயே வேறு நடிகர்களின் நடிப்பில் உருவாகும் என்றும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
மாநாடு படம் கைவிடப்பட்டதால் சமீபத்தில் மகா மாநாடு என்ற படத்தை 125 கோடி செலவில் தயாரித்து 5 மொழிகளில் இயக்கி சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை தொடர்பு கொண்டு நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்துக் கொடுப்பதாகவும் இதற்காக வருகிற 20ம் தேதி தாய்லாந்தில் இருந்து சிம்பு தமிழகம் திரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பிறந்தநாளன்று சிம்பு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!