Cinema
மீண்டும் தொடங்கும் ‘மாநாடு’ - தயாரிப்பாளருடன் சமரசம் ஆனாரா சிம்பு?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் ‘மாநாடு’. அரசியலை மையமாகக் கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
திடீரென மாநாடு படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். மேலும், மாநாடு படம் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலேயே வேறு நடிகர்களின் நடிப்பில் உருவாகும் என்றும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
மாநாடு படம் கைவிடப்பட்டதால் சமீபத்தில் மகா மாநாடு என்ற படத்தை 125 கோடி செலவில் தயாரித்து 5 மொழிகளில் இயக்கி சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை தொடர்பு கொண்டு நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்துக் கொடுப்பதாகவும் இதற்காக வருகிற 20ம் தேதி தாய்லாந்தில் இருந்து சிம்பு தமிழகம் திரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பிறந்தநாளன்று சிம்பு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!