Cinema
திட்டமிட்டப்படி நாளை வெளியாகுமா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ : ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்!
நடிகர் தனுஷ், கௌதம் வாசுதேவ் மேனனுடன் முதன்முறையாக இணைந்த படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், திரைப்படம் பல ஆண்டுகள் ரிலீசாகாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், ''எனை நோக்கி பாயும் தோட்டா'' படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையாவது படம் சொன்ன தேதிக்கு வெளியாகுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ''எனை நோக்கி பாயும் தோட்டா'' திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகுபலி படத்தை வெளியிட்ட அர்கா நிறுவனம் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. அர்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இருந்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை நீக்க அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட் முயன்று வருகிறது.
நாளைக்குள் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியுமா என்பது சந்தேகமே. எனவே ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் மீண்டும் தள்ளிபோவதற்கான வாய்ப்பு உள்ளது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!