Cinema
இரண்டாம் பாகமாக உருவாகும் விஜய் சேதுபதி படம் - தயாரிப்பாளர் தகவல்
அண்மைக் காலமாக தமிழ் திரையுலகில், வெற்றியடைந்த திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது. அதில், சாமி 2, மாரி 2, சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, தேவி 2, சென்னை 28-2 என நிறைய திரைப்படங்கள் வெளியாகின. இதில் சில படங்கள் வணிக ரீதியாகவும், கதை ரீதியாகவும் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில், சமீபத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடிப்பில் வெளியான “இன்று, நேற்று, நாளை” படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருப்பதை பிரபலா சினிமா தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்தார்.
அந்த வரிசையில் 2013ம் ஆண்டு வெளியாக டாப் ஹிட் அடித்த விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்த படம் “சூது கவ்வும்”. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், மூடநம்பிக்கையை மையமாக கொண்டு வெளிவந்த முண்டாசுப்பட்டி, துப்பறியும் கதையம்சமான தெகிடி போன்ற படங்களின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மேற்குறிப்பிட்ட படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!