Cinema
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவிற்கு வாரண்ட் !
நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், கடந்த 2014ம் ஆண்டு, ராடியன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் கடன் காசோலை மூலம் வாங்கப்பட்டது. மேலும், 50 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கடன் பெற்றுள்ளனர்.
இதற்காக சரத்குமார் தரப்பில் 7 காசோலைகள் வழங்கப்பட்டன. ஆனால், அந்த காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. இதையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோரக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆஜராகவில்லை. சரத்குமார், ராதிகா ஆகியோர் நேற்று ஆஜராகத நிலையில், இருவருக்கும், ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டர்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!