Cinema
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவிற்கு வாரண்ட் !
நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், கடந்த 2014ம் ஆண்டு, ராடியன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் கடன் காசோலை மூலம் வாங்கப்பட்டது. மேலும், 50 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கடன் பெற்றுள்ளனர்.
இதற்காக சரத்குமார் தரப்பில் 7 காசோலைகள் வழங்கப்பட்டன. ஆனால், அந்த காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. இதையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோரக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆஜராகவில்லை. சரத்குமார், ராதிகா ஆகியோர் நேற்று ஆஜராகத நிலையில், இருவருக்கும், ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டர்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!