Cinema
பத்து நாள் ஷூட்தான் பாக்கி... `ஆதித்யா வர்மா’ பட அப்டேட்!
2017ல் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான படம் `அர்ஜூன் ரெட்டி’. படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தியில் ஷாஹித் கபூர், க்யாரா அத்வானி நடிக்க `கபீர் சிங்’ என்ற பெயரில் தயாராகிறது. அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவே இயக்குகிறார். தமிழில் ’வர்மா` எனப் பெயரில் எடுத்து கைவிடப்பட்டு தற்போது கிரீசாயா இயக்கத்தில் `ஆதித்யா வர்மா’வாக மீண்டும் உருவாகி வருகிறது. நடிகர் விக்ரமின் மகன் த்ரூவ் விக்ரம், பாலிவுட் நடிகை பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை, மும்பையைத் தொடர்ந்து போர்சுகலில் நடந்துவருகிறது. அடுத்ததாக டேராடூனுக்கு நகர இருக்கிறது படக்குழு. படத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பே மீதம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்தை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறார் படத்தின் தயாரிப்பாளர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!