Cinema
தமிழ் திரை பிரபலங்கள் வாக்களிப்பு! (Photo Story)
தமிழகத்தில் நடைபெற்று வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தமிழக திரை நட்சத்திரங்கள்
நடிகர் அஜித் குமார், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் காலை 7 மணிக்கே சென்று வாக்களித்தார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் நடிகர் விஜய்.
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
நடிகர் த்ரிஷா தனது தாயாருடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார்.
நடிகர் ரஜினிகாந்த், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தனது வாக்கை பதிவு செய்தார்.
இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி நடிகர் ப்ரியாவும் வாக்களித்தனர்.
மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நடிகர் தனுஷ் தனது வாக்கை பதிவு செய்தார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது மனைவி பாடகி சைந்தவியுடன் சென்று வாக்களித்தார்.
நடிகை மீனா வாக்களித்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் வாக்களித்தார்.
நடிகர் சந்தானம் தனது வாக்கை பதிவிட்டார்.
நடிகர் விவேக் வாக்களித்தார்.
நடிகர் அருண் விஜய் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!