உலக அளவில் பிரபலமான இரண்டு சமூக வலைத்தளங்கள் என்றால் அது பேஸ்புக்கும் ட்விட்டரும்தான். இதில் தனி ஒருவரோ அல்லது பிரபலங்களோ தெரிவிக்கும் கருத்துக்கள் சில வைராலாவது வழக்கம். மேலும் கொரோனாவுக்கு பின்னர் உலக தலைவர்களின் பிரச்சாரக கருவியாகவே ட்விட்டர் மாறியுள்ளது.
பேஸ்புக்கில் தவறாக பதியப்படும் கருத்துக்களை நீக்கவோ, எடிட் செய்யவோ இயலும். ஆனால், ட்விட்டரில் பதியப்படும் கருத்துக்களை எடிட் செய்ய இயலாது. மாறாகத் தவறான அந்த பதிவை நீக்கத்தான் முடியும். இதனால் இதில் கருத்து பதிவிடுபவர்கள் கவனத்துடன் தங்கள் கருத்துக்களை வெளியிடுவார்கள்.
சில நேரங்களில் தவறாக வெளியாகும் கருத்துக்கள் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தி விடுவது வழக்கம். இதன் காரணமாக ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவேண்டும் என அதன் பயனர்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவித்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும் ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த எடிட் வசதித்து ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் எதிர்ப்பு மற்றொரு புறம் இருக்கிறது.
அதேபோல், ட்விட்டரில் எடிட் வசதி கொண்டுவந்தால் அதன் மதிப்பே போய்விடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள தங்களின் அதிகாரப்பூர்வ பயனர்களுக்கு எடிட் செய்யும் வசதியை Twitter நிறுவனம் வழங்கியுள்ளது.
மேலும் விரைவில் அமெரிக்காவிலும் இந்த வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் ட்விட்டர் எடிட் செய்யும் வசதி எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் இந்த எடிம் வசதி எப்போது வரும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு இணைய வாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.