வைரல்

’ஏய் எப்புடிறா’.. ஓடும் ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொண்டு சின்ன கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பிய நபர்!

பீகாரில் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபர் பின்னர் காயங்கள் இன்றி தப்பித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’ஏய் எப்புடிறா’..  ஓடும் ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொண்டு சின்ன கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பிய நபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலத்தில் ஓடும் சரக்கு ரயிலுக்கு அடியில் மாட்டிக் கொண்ட நபர் ஒருவர் சின்ன காயங்கள் கூட இல்லாமல் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அந்த வீடியோவில், ஓடும் சரக்கு ரயிலுக்கு அடியில் ஒருவர் படுத்துக்கொண்டு இருக்கிறார். பிறகு ரயில் சென்ற பிறகு எழுந்து கையிலிருந்த பையை எடுத்துக் கொண்டு எதுவும் நடக்காததுபோல் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கஹல்கான் ரயில் நிலையத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபர் கஹல்கான் ரயில் நிலையத்தில் மூன்றாவது மேடையில் நின்று கொண்டிருந்த ரயிலைப் பிடிப்பதற்காகக் குறுக்கு வழியில் தண்டவாளத்தைக் கடந்து சென்றுள்ளார்.

அப்போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் அடியில் நுழைந்து செல்ல முயன்றுள்ளார். அந்த நேரம் திடீரென ரயில் கிளம்பியுள்ளது. இதை உடனே சுதாரித்துக் கொண்ட அவர் அப்படியே படுத்துக் கொண்டு உயர் தப்பியுள்ளார்.

’ஏய் எப்புடிறா’..  ஓடும் ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொண்டு சின்ன கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பிய நபர்!

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த இணைய வாசிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories