இலங்கையில் ஈஸ்டர் திருநாள் அன்று தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 290 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை கொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன. இந்த அவசர நிலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்தார்.