வைரல்

மும்பை குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்

மும்பையின் வடக்கில் உள்ள பரபரப்பான அந்தேரியின் மாரோல் பகுதியில் இன்று காலை கருஞ்சிறுத்தை ஒன்று, உட்லேண்ட் குடியிருப்பு பகுதிக்குள் திடீரென நுழைந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

மும்பை குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மும்பையின் வடக்கில் உள்ள பரபரப்பான அந்தேரியின் மாரோல் பகுதியில் இன்று காலை கருஞ்சிறுத்தை ஒன்று, உட்லேண்ட் குடியிருப்பு பகுதிக்குள் திடீரென நுழைந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வனத்துறையினர் விரைந்தனர்.

அருகிலிருந்த வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் சிறுத்தை வந்ததை தூரத்தில் இருந்து ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

சிறுத்தை எங்கு உள்ளது என கண்டுபிடிக்க முடியாத நிலையில், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். வனத்துறையினர் தீவிரமான தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories