தமிழ்நாடு

“நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

“வாக்குச் சாவடிப் பொறுப்பாளர் என்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர் என்பதை மறந்து விட வேண்டாம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சியில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த திமுக வாக்காளர் பொறுப்பாளர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தி.மு.க எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று வாக்காளர் பொறுப்பாளரிடையே சிறப்புரையாற்றினார்கள். இறுதி நிகழ்வாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்காளர் பொறுப்பாளருக்கு பல அறிவுறைகள் வழங்கி உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை பின்வருமாறு :- “திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திருச்சிக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. தொடர்ந்து 1957 சட்டமன்றத் தேர்தலில் கழகம் போட்டியிட்டது. எனவே, கழகம் தேர்தல் களத்தில் இறங்குவதற்கான அடித்தளம் அமைத்ததே இந்த திருச்சி தான். 1971ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள்மறைவிற்குப் பிறகு திருச்சியில் நடைபெற்றமாநில மாநாட்டில் தான் தலைவர் கலைஞர்அவர்கள் 'ஐம்பெரும் முழக்கங்களை' நமக்குஉருவாக்கித் தந்தார்கள்.

* அண்ணா வழியில்அயராது உழைப்போம்.

* ஆதிக்கமற்றசமுதாயம் அமைத்தே தீருவோம்.

* வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.

*இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

* மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’’ - என்ற ஐம்பெரும் முழக்கங்களை உருவாக்கித் தந்த ஊர் இந்த திருச்சி. முக்கியமான மாநாடுகளை திருச்சியில் தான் தலைவர் கலைஞர் அவர்கள் நடத்துவார்கள். அவை திருப்புமுனை மாநாடுகளாக அமையும்.

“நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் திருச்சியில் நடைபெற்ற மாநாடு தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைக்கும் சிறப்பான மாநாடாக அமைந்திருந்தது. தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவின் கவனத்தையே ஈர்த்த அந்த மாநாட்டை முன்னின்று நடத்திக் காட்டியவர் தான் நம்முடைய முதன்மைச் செயலாளர் நேரு அவர்கள். அவரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது என்று நான் சொல்லி இருக்கிறேன்.

நேரு என்றால் மாநாடு. மாநாடு என்றால் நேரு என்று பெயர் பெற்றவர் அவர். நேருக்கு நிகர் நேரு என்றும் நான் சொல்லி இருக்கிறேன். அத்தகைய பாராட்டுக்கு முழுத் தகுதி படைத்த முதன்மைச் செயலாளர் நேரு அவர்கள், மிகக் குறுகிய காலத்தில் இந்த வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடத்திக் காட்டி இருக்கிறார்.

5 கழக மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடிகளில் இருந்தும் தலா ஒவ்வொரு பொறுப்பாளர்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். உங்கள் அனைவர்க்கும் மனமார்ந்த பாராட்டுதல்களையும் - வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில மாதங்களாக தலைமைக் கழகத்தில் இருந்து உங்களையெல்லாம் அழைத்துப் பேசி உங்களை பற்றிய முழுமையான விவரங்களை பெறச் சொல்லியிருந்தேன். பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிலரை மாற்றவும் சொல்லியிருந்தேன். மாற்றப்பட்டவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களைப் பற்றியும் விவரங்கள் சேர்க்கப்பட்டது.

இப்படி பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்’ என்ற அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கழகத்தின் வரலாறு - அடிப்படைக் கொள்கைகள் - திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள் - நவீன தமிழ்நாட்டை உருவாக்க நாம் எடுத்த முயற்சிகள் - திராவிட மாடல் ஆட்சி ஆகியவை குறித்த அடிப்படை தகவல்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அதேபோல், தேர்தல் பணிகள் குறித்த விதிமுறைகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவை அனைத்தையும் மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும். கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் தொடங்க உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் உத்தரவிட்டு அந்தப் பணிகள் முடிந்துள்ளது. இந்த நிலையில் தான் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். இத்தகைய பெருமை வாய்ந்த இந்த ஆண்டில்தான் நீங்கள் வாக்குச்சாவடியின் பொறுப்பாளர்கள் ஆகியிருக்கிறீர்கள்.

கழகத்தின் வாக்குச்சாவடி பொறுப்பாளர் என்ற நிலையை அடைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி என்பதையே அடிப்படையான கடமையாக வைத்திருக்கிறது. கொரோனா முதல் அலையின் போது நாம் ஆட்சியில் இல்லை. நம் கழகக் கண்மணிகளை நாம் கொரோனாவுக்கு இழந்தபோதும் கூட ஒவ்வொரு பகுதியிலும் நம் கழகமே முழுவீச்சில் இறங்கி நிவாரணப் பணிகளைச் செய்தது என்பதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர்.

வாக்குச் சாவடிப் பொறுப்பாளர் என்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர் என்பதை மறந்து விட வேண்டாம். நாடும் நமதே - நாற்பதும் நமதே - என்று நான் முழங்கி இருக்கிறேன் என்றால் அது உங்கள் மீதான நம்பிக்கை வைத்துத்தான் முழங்கி இருக்கிறேன் என்பதை மறந்து விட வேண்டாம். இன்று முதல் கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வெற்றி ஒன்றே உங்களது இலக்காக அமைய வேண்டும். இந்த வெற்றியை அடைவதற்கான வழிமுறைகளில் மிகச் சரியாக நீங்கள் செல்ல வேண்டும்.

“நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு நிறைய கடமைகளும் இருக்கின்றன.

1. வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பது தான் உங்களது முதல் பணியாகும். வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர்களின் விவரங்கள் சரியாக இருக்கின்றனவா,

2. முறையான வாக்காளரை நம்மை நோக்கி ஈர்ப்பது இரண்டாவது பணியாகும். வாக்காளர்களைச் சந்தித்து பரப்புரை மேற்கொள்வதும், நம்முடைய சாதனைகளை அவர்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்வதும் உங்களது பணியாகும்.

3. வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வரவைப்பது மூன்றாவது முக்கியப் பணியாகும். இம்மூன்றையும் சிறப்பாகச் செயல்பட்டுத்த அந்த வாக்காளர் குடும்பத்துடன் நீங்கள் நெருக்கமான நட்பைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் வாக்குச்சாவடியில் 250 குடும்பங்கள் இருக்குமானால் அந்தக் குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும்.

அது எப்படி மாற முடியும்?

முதலில் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வாக்காளரின் பெயர், அவரின் வயது, அவருடைய குடும்பத்தினர் யார், என்ன படித்திருக்கிறார், என்ன தொழில் செய்கிறார், எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்ற முழுவிவரமும் உங்களிடம் இருக்க வேண்டும். அடுத்ததாக அரசின் திட்டங்களையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருங்கள். உங்களிடம் இன்று வழங்கப்பட்டிருக்கும் புத்தகத்தைப் படித்துப் பார்த்தாலே அரசின் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்துவிடும். யாருக்கு என்ன தேவையோ அதைக் கண்டறிந்து பெற்றுக் கொடுங்கள். ஒருவருக்கு முதியோர் உதவித்தொகையில் உதவிகள் தேவைப்படலாம். இன்னொருவருக்கு பட்டா மாறுதலில் உதவி தேவைப்படலாம். இப்படி ஒவ்வொருவரின் தேவையையும் கண்டறிந்து அப்பணிகளை நிறைவேற்றித் தாருங்கள்.

இதனைச் செய்து தர உங்கள் பகுதியின் ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்களையோ, சட்டமன்ற உறுப்பினர்களையோ அல்லது அமைச்சர்களையோ அணுகுங்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் நான் வலியுறுத்தப் போகிறேன். நீங்கள் கொண்டு வரும் தகுதி வாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித்தரப்படும் என்கிற உறுதியை நான் அளிக்கிறேன். தினமும் ஒரு மணி நேரத்தை வாக்குச்சாவடிப் பணிகளுக்கு என்று ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் பத்து வீடுகளுக்குச் சென்று பேசுங்கள்.

ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் சென்று வந்துவிடலாம். சில வீடுகளில் வரவேற்பார்கள். சில வீடுகளில் வரவேற்பு இல்லாமல் இருக்கக் கூடும். அதற்காக நாம் விட்டுவிடக் கூடாது. மீண்டும் அடுத்த மாதம் புன்னகையோடு அவர்களை அணுகுங்கள். என்னைப் பொறுத்தவரையில் நம்மை நிராகரிப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

மிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு விதத்தில் பயனடையும் திட்டங்களாகப் பார்த்துப் பார்த்து நாம் செயல்படுத்தி வருகிறோம்.

இதனால் மக்கள் நம் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான பெண்களுக்கு பயனளிக்கும் திட்டம் தான் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி. ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் கலைஞர் பெயரிலான உரிமைத் தொகையை பெற இருக்கிறார்கள். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெற்றுவரும் 1000 ரூபாய் உதவித் தொகையை 1200 ஆக ஆக்கி இருக்கிறோம். 18 லட்சக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறுகிறார்கள் இப்படி கோடிக்கணக்கான - இலட்சக்கணக்கானவர் பயன்பெறும் திட்டத்தை நிறைவேற்றி வரும் அரசு திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் பரப்புரையாளர்களாக நீங்கள் செயல்பட வேண்டும். நமக்கு எதிராக அவதூறுகளையும், பொய்ச்செய்திகளையும் பரப்பிட ஒரு சிறு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது.

“நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

பொய்களுக்கு ஆயுள் மிகக் குறைவு. அவர்கள் பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கட்டும். நாம் திரும்பத் திரும்ப நம் அரசின் திட்டங்களைப் பற்றிப் பேசுவோம். நம் அரசு கொண்டு வந்திருக்கும் நலத்திட்டங்கள் குறித்து வாக்காளர்களிடம் விளக்குங்கள். இதன் மூலமாக எதிரிகள் பரப்பும் அவதூறுகள் சுக்குநூறாக நொறுங்கிப் போகும்.

இன்றைக்கு பிரச்சார பாணி மாறிவிட்டது. இன்றைக்கு சமூக ஊடகங்கள் தான் சிறப்பான பிரச்சாரக் களங்களாக மாறிவிட்டன. வீட்டில் உள்ளவர்களே பக்கத்து அறையில் இருப்பவர்களிடம் வாட்ஸப் மூலம் பேசிக் கொள்ளும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் நாம் அனுப்பும் செய்தி ஒரு நிமிடத்தில் உலகம் முழுக்க பரவும் வசதியும் அதில் இருக்கிறது. இதனை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் கணக்குத் தொடங்குவதையும் கட்டாயம் செய்ய வேண்டும்.

அந்தக் கணக்குகளில் இருந்து அவதூறுகளுக்கு பதில் சொல்லுங்கள். நம் கொள்கைளைப் பேசுங்கள். நலத்திட்டங்களை பதிவிடுங்கள். தேவையில்லாத வம்பு வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். எதையாவது சொல்லி நம்மை திசை திருப்பி விடுவார்கள். இந்த திசை திருப்பலுக்கு பலியாகி விடக் கூடாது. அதேபோல், தேவையற்ற பிரச்னைகளைக் கிளப்பி கட்சிக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கவும் கூடாது. சமூக ஊடகங்களை நல்ல நோக்கத்தோடு - நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய தொண்டர் பலத்திற்கும் கட்டமைப்புக்கும் நிகராக தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் இல்லை என்பதுதான் உண்மை. நம் பலத்தை நாம் சமூக ஊடகங்களிலும், களத்திலும் முழுமையாகக் காட்ட வேண்டும். ஏனென்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிகமிக முக்கியமான தேர்தல். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளையும் நமது அணி கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல -

இந்தியா முழுமைக்கும் நமது அணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவின் கட்டமைப்பை பாஜக ஆட்சி சிதைத்துவிட்டது. இதற்கு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. பாஜக ஆட்சி தொடருமானால் இந்தியாவில் ஜனநாயகத்தை, சமூகநீதியை, மக்களாட்சியை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.

மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமானால் - இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. தமிழ்நாடு என்ற மாநிலமோ - அதற்கான சட்டமன்றமோ - முதலமைச்சரோ - அமைச்சர்களோ - சட்டமன்ற உறுப்பினர்களோ இருக்க மாட்டார்கள். அத்தனையையும் காலி செய்து விடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் இருக்காது. இது தான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும்.

அங்கே புதிதாக நாடாளுமன்றத்தைக் கட்டி - 888 இருக்கைகளைப் போட்டிருக்கிறார்கள். அது எதற்காக? நாடாளுமன்றத்தில் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப இருக்கைகளைப் போட நினைக்கிறார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பேரால் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கப் பார்க்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகப் பின்பற்றிய தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். வடமாநிலங்களில் இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுப் போனாலும் - வட மாநில எம்.பி.களை வைத்து ஆட்சியைப் பிடித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். தமிழ்நாட்டின் குரலை இதன் மூலமாக தடுக்கப் பார்க்கிறார்கள். எனவே தான் இந்தத் தேர்தலை மிக மிக முக்கியமான தேர்தலாகச் சொல்கிறேன்.

மாநிலங்களுக்கு - பல்வேறு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்க்கு - பல்வேறு மொழியைப் பேசுபவர்களுக்கு - பல்வேறு கலாச்சார பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட கட்சி பாஜக.

ஒற்றைக் கட்சியே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி அது. ஒற்றைக் கட்சி ஆட்சி அமைந்தால் - ஒரே ஒரு ஆள் கையில் அதிகாரம் போய்விடும். இது பாஜகவினருக்கே ஆபத்தான கொள்கை ஆகும்.

அதனால் தான் பாஜக இந்த தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்கிறோம். இந்த முக்கியமான இலக்கை முன்னெடுக்கும் கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். 26 கட்சிகள் அடங்கிய இந்தக் கூட்டணிக்கு indian national developmental inclusive alliance என்று பெயர் சூட்டி இருக்கிறோம். INDIA - என்பது இந்தக் கூட்டணிக்கு பெயர். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணி தான். இதனை பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என்று நினைத்து ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார்.

“நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!

இந்த நோக்கத்தை ஓராண்டு காலமாக நான் சொல்லி வருகிறேன் என்பதால் என் மீதும் கோபம். மத்தியப் பிரதேசத்துக்கு போனாலும் திமுகவை திட்டுகிறார். அந்தமான் விமானநிலையத்தை திறந்து வைக்கும் போதும் திமுகவை திட்டுகிறார். மத்தியப் பிரதேசத்துக்கு போனாலும் திமுகவை திட்டுகிறார்.அந்தமான் விமானநிலையத்தை திறந்து வைக்கும் போதும் திமுகவை திட்டுகிறார். வாரிசுகளுக்கான கட்சியாம் திராவிட முன்னேற்றக் கழகம். ஆமாம், வாரிசுகளுக்கான கட்சி தான். ஆமாம், வாரிசுகளுக்கான கட்சி தான். ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள். தந்தைப் பெரியாரின் வாரிசுகள். பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள். தமிழினத் தலைவர் கலைஞரின் வாரிசுகள் நாங்கள். இதனை தைரியமாக என்னால் சொல்ல முடியும்.

பாஜக யாருடைய வாரிசு? கோட்சேவின் வாரிசுகள் தான் நீங்கள் தான் என்று உங்களால் தைரியமாகச் சொல்ல முடியுமா? சொல்வதற்கு தைரியம் உண்டா?

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை இந்த நாடு மறக்கவில்லை. அன்று குஜராத்தில் நடந்ததை இன்று மணிப்பூர் நினைவூட்டிக் கொண்டு இருக்கிறது. மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய வன்முறையை இன்று வரை அந்த மாநிலத்தை ஆளும் மணிப்பூர் பாஜக அரசாலும் முடியவில்லை. ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசாலும் முடியவில்லை.

வன்முறையாளர்களும், மாநிலத்தை ஆளும் மணிப்பூர் போலீஸும் கைகோர்த்துக் கொண்டு மக்களைத் தாக்குகிறது என்று நான் சொல்லவில்லை, பாஜகவை சேர்ந்த மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பாவோலியன்லால் ஹொக்கிப் சொல்லி இருக்கிறார். இப்படிச் சொல்லி இருப்பது ஸ்டாலின் அல்ல, பாஜகவுக்கு எதிரணியில் இருப்பவர்கள் அல்ல.பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சொல்லி இருக்கிறார்.

ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மனதில் வேற்றுமையை விதைத்து - மனக்கசப்பை உருவாக்கி - வெறுப்பு அரசியல் மூலமாக அரசியல் ஆதாயம் தேட நினைத்ததன் விளைவு தான் இன்று மணிப்பூர் பற்றி எரிகிறது. வெறுப்பை அதிகமாக விதைத்தால் - அந்த வெறுப்பின் விளைவுகளை தடுக்க முடியாது.

நாம் தடுக்க முடியாத அளவுக்கு அது தனது ஆட்டத்தைக் காண்பிக்கும். அது தான் இன்று மணிப்பூரில் நடக்கிறது. இங்கே ஒரு கொத்தடிமைக் கூட்டம் - அதிமுக என்ற பெயரில் இயங்கி வருகிறதே. அவர்கள் யாராவது மணிப்பூரைப் பற்றி பேசினார்களா? வாய்க்கு வந்ததைப் பேசுவாரே பழனிசாமி. அவர் பேசினாரா? பேசவில்லை. பாஜகவுக்கு நான் அடிமையில்லை என்று சொல்லும் பழனிசாமி, மணிப்பூர் கொடூரத்துக்கு காரணமான அந்த மாநில முதலமைச்சரையோ ஒன்றிய பாஜக அமைச்சரையோ கண்டித்தாரா?

அடிமையில்லை என்று சொல்லி விட்டு,பிரதமருக்கு பக்கத்தில் எப்படி உட்கார்ந்தார் பழனிசாமி. பழனிசாமியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி பிரதமர் பேசலாமா? இந்த ஊழல் பேர்வழிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பிரதமர் பேசலாமா? கர்நாடக மாநிலத்தில் ஊழல் பாஜக அரசை ஊழலுக்காகத்தானே அந்த மாநில மக்கள் தோற்கடித்தார்கள். அது மறந்து போய்விட்டதா?

அதிமுகவினர் மீதான ஊழல் வழக்குகளைக் காட்டி அவர்களை அடிபணிய வைத்துள்ளது பாஜக. கடந்த காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பாஜகவுக்கு பயந்து அடமானம் வைத்தது அதிமுக. உரிமைகளைக் கைவிட்டவர்களும் - காவு வாங்கியவர்களும் கை கோர்த்து வருகிறார்கள். இவர்களை இந்த தேர்தலில் முழுமையாக வீழ்த்தியாக வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories