தமிழ்நாடு

இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று - மிக அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னை! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று - மிக அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னை! #CoronaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிகஅதிக அளவில் காணப்படுகிறது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,204 - ஆக இருந்தது. இந்நிலையில், இன்று மேலும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று - மிக அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னை! #CoronaUpdates

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 97 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேரும் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 92 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,051 ஆக உள்ளது.

banner

Related Stories

Related Stories