தமிழ்நாடு

“தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு” : நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.

“தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு” : நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 302 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் 3,374 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகளவிலான பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. அங்கு 537 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 74 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மதுரையை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் நபராக பலியானார். இதையடுத்து நேற்று மட்டும் மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர்.

“தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு” : நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்நிலையில், சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 61 வயது முதியவர் டெல்லி மத மாநாட்டிற்கு சென்ற திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories