தமிழ்நாடு

விமானத்தில் வந்த குழந்தை உயிரிழப்பு : சென்னைப் பயணிக்கு ஏற்பட்ட சோகம்!

ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணியின் 6 மாத கைக்குழந்தை விமான நிலையத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் வந்த குழந்தை உயிரிழப்பு : சென்னைப் பயணிக்கு ஏற்பட்ட சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தாம்பரம் அருகே வேங்கைவாசலை சோ்ந்த தம்பதியர் சக்திமுருகன், கீதா. இவா்கள் ஆஸ்திரேலியாவில் மென்பொறியாளராக பணியாற்றி வருகின்றனர். இவா்களுக்கு ரித்தீஸ் என்கிற 6 மாதக் கைக்குழந்தை இருந்தது. மகளையும் குழந்தையையும் பார்த்துக்கொள்வதற்காக கீதாவின் தாய் பிரிட்டோ குயின் என்பவரும் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

இந்நிலையில் கீதா, ஆறு மாத குழந்தை ரித்தீஸ் மற்றும் கீதாவின் தாய் ஆகிய மூவரும் ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு மலேசியா வழியாகச் சென்னை வந்துள்ளனர்.

சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை சோதணை முடிந்து சுங்க சோதணை பிரிவிற்கு வந்தபோது,குழந்தை அசைவற்று இருப்பதை உணா்ந்த அவர்கள், உடனடியாக விமானநிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனா்.

விமானத்தில் வந்த குழந்தை உயிரிழப்பு : சென்னைப் பயணிக்கு ஏற்பட்ட சோகம்!

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இரண்டு மணி நேரத்துக்கு முன்னரே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா மற்றும் அவரது தாய் கதறி அழுதுள்ளனர்.

குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதணை முடிவில் குழந்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.

குழந்தை உயிரிழந்தது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த விமான நிலையக் காவலர்கள். குழந்தை இறந்தது குறித்து குழந்தையின் தாய், விமான நிலைய அதிகாரி மற்றும் விமான ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 6 மாத குழந்தை உயிரிழந்தது விமான நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories