தமிழ்நாடு

விடுதியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி : சென்னை ஐ.ஐ.டி.யில் அதிர்ச்சி!

சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் கேரளாவை சேர்ந்த மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி : சென்னை ஐ.ஐ.டி.யில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லதீப். இவர், சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சரயு பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார்.

பாத்திமா லத்தீப்பின் தாய் சுஜிதா நேற்றிரவு முதல் பாத்திமாவிற்கு போன் செய்துள்ளார். ஆனால், பாத்திமா போனை எடுக்கவில்லை.

இன்று காலையும் பாத்திமாவிற்கு அவரது தாய் சுஜிதா போன் செய்துள்ளார். அப்போதும் எடுக்காததால் சந்தேகமடைந்த சஜிதா லதீப் தனது மகளின் தோழிகளுக்கு கால் செய்து போன் எடுக்காத விவரத்தை கூறியுள்ளார்.

விடுதியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி : சென்னை ஐ.ஐ.டி.யில் அதிர்ச்சி!

இதனையடுத்து பாத்திமா லதீபின் தோழிகள் அவரது அறையின் கதவை தட்டியுள்ளனர். நெடுநேரமாகியும் திறக்காததால் விடுதி ஊழியர்களிடம் சொல்ல அவர்கள் வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாத்திமா லதீப் ஃபேனில் தூக்கு மாட்டி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்த கோட்டூர்புரம் போலிஸார் வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக பெண்ணின் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் பாத்திமா குறைந்த மதிப்பெண்கள் வாங்கியதால் கவலையுடன் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விடுதி மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories