தமிழ்நாடு

கொட்டி தீர்க்க போகும் மழை., தமிழகத்தில் இன்றுமுதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டி தீர்க்க போகும் மழை., தமிழகத்தில் இன்றுமுதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 18-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைத் தவிர தெலங்கானா, ஆந்திரா, உள் கர்நாடகாவிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்துவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று, சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ததால், இதமான சூழல் நிலவிய வருகின்றது.

banner

Related Stories

Related Stories