தமிழ்நாடு

தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை... அவதியுறும் வாகன ஓட்டிகள் கண்டனம்!

பெட்ரோல், டீசல் மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு வாகன ஓட்டிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை... அவதியுறும் வாகன ஓட்டிகள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றியமைத்து வருகிறது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.

அதன் படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 7 காசுகள் அதிகரித்து ரூ.74.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசலின் விலையும் 6 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டருக்கு ரூ.68.90க்கு விற்கப்படுகிறது.

ஏற்கெனவே பொருளாதார மந்தநிலையால் தொழில் நிறுவனங்கள் அழிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடும் அதிருப்திக்கு ஆளான வாகன் ஓட்டிகள் இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories