தமிழ்நாடு

“ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள்” - பெங்களூரு காவல் துறை எச்சரிக்கை

லாரி ஓட்டுநர் ஓருவர் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அளித்த தகவலின் பேரில், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது பெங்களூரு காவல் துறை.

“ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள்” - பெங்களூரு காவல் துறை எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பெங்களூரு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. லாரி ஓட்டுநர் ஓருவர் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அளித்த தகவலின் பேரில், தமிழக அரசுக்கு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளது பெங்களூரு காவல் துறை.

“ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள்” - பெங்களூரு காவல் துறை எச்சரிக்கை
தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை - முதன்மை செயலாளர் சுற்றறிக்கை 

ரயில்களை குறிவைத்து தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க டிஜிபி, காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு முதன்மைச்செயலாளர் சுற்றறிக்கை கொடுத்து அறிவுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories