விளையாட்டு

"அந்த பையன் இன்னும் 2 வருடத்துல இந்தியாவுக்கு ஆடுவார்" -தமிழக வீரரை புகழ்ந்த ஹர்திக் பாண்டியா !

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார்.

"அந்த பையன் இன்னும் 2 வருடத்துல இந்தியாவுக்கு ஆடுவார்" -தமிழக வீரரை புகழ்ந்த ஹர்திக் பாண்டியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய நிலையில், நேற்று தனது இரண்டாவது போட்டியில் டெல்லியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சந்தித்தது.

"அந்த பையன் இன்னும் 2 வருடத்துல இந்தியாவுக்கு ஆடுவார்" -தமிழக வீரரை புகழ்ந்த ஹர்திக் பாண்டியா !

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் சர்பிராஸ் கான் ஆகியோர் அணியின் ரன்னை கொஞ்சம் உயர்த்தினர்.

ஆனால் டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ டெல்லி அணி கடும் நெருக்கடிக்கு உள்ளானது. ஆனால் இறுதியில் அக்சர் படேல் அதிரடியாக 36 ரன்கள் குவித்த டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் என்ற சவாலான ரன்னை குவித்தது.

"அந்த பையன் இன்னும் 2 வருடத்துல இந்தியாவுக்கு ஆடுவார்" -தமிழக வீரரை புகழ்ந்த ஹர்திக் பாண்டியா !

பின்னர் ஆடிய குஜராத் அணியும் டெல்லி அணியை போலவே ஆரம்பத்தில் தடுமாறியது. சகா,கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்து சென்றனர். 50 ரன்களை இந்த ஜோடி கடந்த நிலையில், 29 ரன்களில் விஜய் சங்கர் ஆட்டமிழந்தார்.

ஆனால், அதன்பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் சாய் சுதர்சனோடு இணைந்து அதிரடி ஆட்டம் ஆடி அணியை 19-வது ஓவரிலேயே வெல்ல வைத்தார். இந்த போட்டியில் 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

"அந்த பையன் இன்னும் 2 வருடத்துல இந்தியாவுக்கு ஆடுவார்" -தமிழக வீரரை புகழ்ந்த ஹர்திக் பாண்டியா !

இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா " சாய் சுதர்சன் இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதற்கான பாராட்டுக்கள் அவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும். கடந்த 15 நாட்களில் அவர் செய்து வரும் நல்ல பேட்டிங் அனைத்தும் அவருடைய கடின உழைப்பை உங்களுக்கு காட்டுகிறது. இதே போல செயல்படும் பட்சத்தில் இன்னும் 2 வருடங்களில் அவர் தன்னுடைய ஐபிஎல் அணிக்கு இன்னும் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய கிரிக்கெட்டுகாக முக்கிய பங்காற்றுவார் என்று கணிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories