இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் வாயிலாக ரசிகர்களிடம் ஒரு உதவி கேட்டுள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரின்போது, ஹோட்டல் ஊழியர் ஒருவர் சொன்ன ஆலோசனை, தனது பேட்டிங் ஸ்டைலில் மாற்றம் தந்ததாக கூறும் சச்சின், இப்போது அவரை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த சச்சினின் ட்வீட்டில், ”எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது தாஜ் கோரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்.
அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். சச்சினின் இந்த ட்வீட்டை பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.