அரசியல்

பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் - மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஓரணியில் திரண்டு வீழ்த்த வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.கவை வீழ்த்த  எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் - மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முறை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளை மட்டும் வெற்றி பெற்ற பாஜக , அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.

இது, அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பேரடியாகவே கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சியினர் ஓரணியில் திரண்டு அவர்களுக்கு எதிராகப் பணியாற்ற வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories