டெல்லியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, டெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மியின் ஆட்சி செயல் திறனற்று இருக்கிறது. மேலும் கெஜ்ரிவால் ஆட்சியில் சிறந்த செயல்கள் ஏதும் செய்யவில்லை என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருக்கிறார். அதில்,
பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு டூர் செல்வது, கருத்து சொல்வது போன்ற பணிகளில் தான் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதை தவிர மக்கள் நல பணிகள் ஏதும் செய்து முடிக்கவில்லை. இதன் காரணமாகவே பொய்யாக தேசியவாதம் பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.
நீங்கள் பதிலே சொல்லமுடியாத மூன்று முக்கிய கேள்விகளை டெல்லி மக்கள் கேட்கிறார்கள்.
முதல் கேள்வி: டெல்லி சரியாக இயங்கவில்லை என்றால் ஏன் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை?
இரண்டாவது கேள்வி: 2014ல் பாஜக, டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்குவோம் என கூறியது. ஏன் வழங்கவில்லை?
மூன்றாவது கேள்வி: இம்ரான் கான் ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும்?
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.