அரசியல்

முதல்வர் பதவிக்கு சொந்த கட்சியினருக்கே லஞ்சம் கொடுத்த எடியூரப்பா! 

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, அத்வானி, அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களுக்கு சுமார் ரூ.1800 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

முதல்வர் பதவிக்கு சொந்த கட்சியினருக்கே லஞ்சம் கொடுத்த எடியூரப்பா! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, அத்வானி, அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களுக்கு சுமார் ரூ.1800 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

இதுபற்றி, The Caravan இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு டைரியில் இதுதொடர்பாக, எடியூரப்பா கன்னடத்தில், குறிப்பு எழுதி வைத்துள்ளார். ஒவ்வொரு பக்கத்திலும் எடியூரப்பா கையெழுத்து உள்ளது. 2017ம் ஆண்டு வரை இந்த டைரி வருமான வரித்துறையினரிடம்தான் இருந்துள்ளது. பாஜக மத்திய கமிட்டிக்கு ரூ.1000 கோடி, அருண் ஜெட்லி மற்றும் நிதின் கட்கரிக்கு தலா ரூ.150 கோடி, ராஜ்நாத் சிங்கிற்கு ரூ.100 கோடி, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு தலா ரூ.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. கட்கரி மகன் திருமணத்திற்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த இதழ் செய்தி தெரிவிக்கிறது.

முதல்வர் பதவிக்கு சொந்த கட்சியினருக்கே லஞ்சம் கொடுத்த எடியூரப்பா! 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கர்நாடகாவின் முதல்வராக இருந்த காலக்கட்டங்களில் பா.ஜனதாவின் மத்திய தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி வழங்கினார் என குற்றம் சாட்டியுள்ளார். கேரவன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியை குறிப்பிட்டு எடியூரப்பா, பா.ஜனதா கட்சியின் மத்திய குழுவிற்கும், நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பணம் வழங்கியுள்ளார் என சுர்ஜேவாலா கூறியுள்ளார்.மேலும்,இது உண்மையோ அல்லது பொய்யோ? எடியூரப்பாவின் கையெழுத்து அடங்கிய இந்த டைரி 2017-ம் ஆண்டிலிருந்து வருமான வரித்துறையிடம் உள்ளது. அப்படியானால், பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா ஏன் அதை விசாரிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் பதவிக்கு சொந்த கட்சியினருக்கே லஞ்சம் கொடுத்த எடியூரப்பா! 

சவ்கிதார் என்று பெயரை சூட்டிக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்த டைரியில் பெயர் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும், இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும். லோக்பால் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது

banner

Related Stories

Related Stories