முரசொலி தலையங்கம்

“மோடியின் 100 நாள் விழா : வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும் வேலை” - முரசொலி தலையங்கம்  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

30.5.2019 அன்று இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி, 7.9.2019 அன்று 100 நாட்களை நிறைவு செய்தது. இந்தியாவை நீண்டகால பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் எண்ணற்ற பிரச்னைகளை உருவாக்கிவிட்டு பின் நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, திட்டமிட்டு காஷ்மீர் மாநிலத்தையே சிறைக்கூடமாக்கி வெறுப்பு அரசியலின் வேருக்கு நீரூற்றியது பா.ஜ.க அரசு.

நாட்டு மக்களிடையே இன-மொழி பிரச்னைகளை கிளப்பி, மற்ற கட்சிகளின் அரசியலுக்குள் அத்துமீறி பிரவேசித்தது. இப்படி அரசியல் லாபத்திற்காக மக்களைக் குழப்பியதிலேயே 100 நாட்கள் கழிந்துவிட்டன, இந்நிலையில் கொண்டாடப்படும் பிரதமர் ‘மோடியின் 100 நாள் விழா’வானது, ‘வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும்’ வேலை என்று முரசொலி நாளேடு விமர்சித்துள்ளது.

banner