மு.க.ஸ்டாலின்

கடமை தவறிய அ.தி.மு.க அரசு, மக்கள் தலையில் சுமையை போடுவது சரியா - மு.க.ஸ்டாலின் கேள்வி

ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடமை தவறிய அ.தி.மு.க அரசு, மக்கள் தலையில் சுமையை போடுவது சரியா - மு.க.ஸ்டாலின் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இந்த விலை உயர்வு திங்கள் முதல் அமலுக்கு வருகிறது. பால் கொள்முதல் விலை உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த விலை உயர்வு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடமை தவறிய அ.தி.மு.க அரசு சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '' பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை. தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது. தரமான விநியோகம் என்பது அரசின் கடமை. கடமை தவறிய அதிமுக அரசு, சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா '' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேபோல தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி பால் விலை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அத்தியாவசியப் பொருளான பாலின் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் கூடுதலாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வானது மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஆளும் அ.தி.மு.க அரசு இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories