இந்தியா

ஆன்மீக சுற்றுலா செல்பவர்களே எச்சரிக்கை.. ஓடும் வாகனத்தில் ஏறி கொள்ளையடித்த குஜராத் கொள்ளையர்கள் ! | CCTV

கோவையில் இருந்து வட மாநிலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற வாகனத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் கொள்ளை அடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீக சுற்றுலா செல்பவர்களே எச்சரிக்கை.. ஓடும் வாகனத்தில் ஏறி கொள்ளையடித்த குஜராத் கொள்ளையர்கள் ! | CCTV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஆன்மீக பயணம் செல்ல திட்டமிட்டனர். அதன்படி கடந்த 28ம் தேதி 18 நாட்கள் வட மாநிலங்களில் உள்ள காசி, சாய்பாபா கோவில் உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து கடந்த 7-ம் தேதி இரவு ஒடிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் பேருந்தில் வந்துகொண்டிருந்த போது, அதிகாலை சுமார் 4 மணி அளவில் குஜராத்திற்கு வந்தனர். அங்கே விடுதியில் தங்குவதற்காக இறங்கிய அவர்கள், பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தங்கள் உடமைகள் ஒவ்வொன்றாக எடுத்தனர்.

ஆன்மீக சுற்றுலா செல்பவர்களே எச்சரிக்கை.. ஓடும் வாகனத்தில் ஏறி கொள்ளையடித்த குஜராத் கொள்ளையர்கள் ! | CCTV

அப்போது உடமைகள் குறைந்து காணப்பட்டுள்ளது. இதனால் ந்தேகம் அடைந்த ஓட்டுனர், உதவியாளர் பேருந்தின் மீது ஏறி உடமைகளை சரி பார்த்தபோது சிலரின் உடமைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுனர், தனது பேருந்தின் பின்பக்கம் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதிகாலை 2 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் அதில் வந்த மூன்று பேரில் ஒருவன் ஓடும் பேருந்தில் தாவி ஏறுவதும் பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளை கீழே வீசுவதும் பதிவாகி இருந்தது. அது மட்டுமின்றி ஓடும் பேருந்தில் இருந்து இரு சக்கர வாகனத்திற்கு மாறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

ஆன்மீக சுற்றுலா செல்பவர்களே எச்சரிக்கை.. ஓடும் வாகனத்தில் ஏறி கொள்ளையடித்த குஜராத் கொள்ளையர்கள் ! | CCTV

இது குறித்து சுற்றுலா சென்ற சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கூறுகையில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 நாள் ஆன்மீக சுற்றுலாவாக வட மாநிலங்களுக்கு சென்றோம். காசி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று விட்டு குஜராத்திற்கு சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் எங்களுடன் வந்திருந்த 10 பேரின் உடைமைகளை கொள்ளையடித்துள்ளனர்.

ஆன்மீக சுற்றுலா செல்பவர்களே எச்சரிக்கை.. ஓடும் வாகனத்தில் ஏறி கொள்ளையடித்த குஜராத் கொள்ளையர்கள் ! | CCTV

குஜராத்தை அடைந்ததும் தங்கு விடுக்கு சென்ற போதுதான் இந்த சம்பவம் தெரிய வந்தது. மேலும் துணிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக மேலும் சிலரின் பணம் மற்றும் பொருட்கள் பேருந்தின் உள் பகுதியில் வைத்ததால் அவை தப்பியது. சினிமாவில் தான் இது போன்ற காட்சிகளை பார்த்திருக்கிறோம். தற்போது நாங்கள் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நடந்தது அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்" என்றார்.

ஆன்மீக சுற்றுலா செல்பவர்களே எச்சரிக்கை.. ஓடும் வாகனத்தில் ஏறி கொள்ளையடித்த குஜராத் கொள்ளையர்கள் ! | CCTV

வழக்கமாக வட மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளை குறி வைத்து ஓடும் லாரியில் ஏறி கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், சுற்றுலா சென்ற பேருந்தில் இப்படி ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories