இந்தியா

15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட மருத்துவமனையில் கிடந்த 4 உடல்கள்: சடலங்கள் அருகே இருந்த கடிதங்கள்!

பயன்பாட்டில் இல்லாத மருத்துவமனை கட்டடத்தில் இருந்து 4 சடலங்களை போலிஸார் கண்டெடுத்துள்ள சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட மருத்துவமனையில் கிடந்த 4 உடல்கள்:  சடலங்கள் அருகே இருந்த கடிதங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கண்டிவாலி பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பாழடைந்த மருத்துவமனை கட்டத்தில் ஒரு தாயும் அவரின் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த மருத்துவமனை கட்டத்தில் இறந்த நிலையில் 4 பேரின் சடலம் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. பிறகு அங்கு வந்த போலிஸார் அந்த 4 பேரின் உடலையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட மருத்துவமனையில் கிடந்த 4 உடல்கள்:  சடலங்கள் அருகே இருந்த கடிதங்கள்!

இதில் மருத்துவமனை கட்டத்தில் வசித்து வந்த தாய் கிரண் தேவியும் அவரது மகள்கள் முஸ்கன், பூகி ஆகியோர்தான் இறந்தவர்கள் என்பதும் மற்றொரு ஆண் சடலம் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இறந்த நான்கு பேரின் சடலங்களுக்கு அருகே சில கடிதங்களையும் போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பழைய பாழடைந்த கட்டடம் என்பதால் கண்டெடுக்கப்பட்ட கடிதங்கள் இவர்கள் எழுதியது தானா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட மருத்துவமனையில் கிடந்த 4 உடல்கள்:  சடலங்கள் அருகே இருந்த கடிதங்கள்!

அதேபோல், இந்த 4 பேரும் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்களா அல்லது இவர்களை யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories