இந்தியா

ஆபாச படம் காட்டி சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை.. முதியவருக்கு 'காப்பு' மாட்டிய போலிஸ்!

ஆபாச படம் காட்டி சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலிஸார் கைது செய்தனர்.

ஆபாச படம் காட்டி சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை.. முதியவருக்கு 'காப்பு' மாட்டிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். முதியவராக இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர் அப்பகுதியில் உள்ள சிறுவர்களைத் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது அடிக்கடி அழைத்துச் சென்று வந்துள்ளார். அப்போது சிறுவர்களுக்கு ஆபாச படங்களைக் காண்பித்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் முதியவர் பிரேம்குமார் மீது காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து முதியவர் பிரேம்குமாரை கைது செய்தனர். முதியவர் ஒருவர் ஆபாசப்படம் காண்பித்து சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories