இந்தியா

அடித்து உதைத்த கணவன்... சகோதரருடன் சேர்ந்து கொலை செய்த மனைவி : மும்பையில் 'பகீர்' சம்பவம்!

குடித்துவிட்டு தினமும் அடித்த கணவனை தன் சகோதரனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடித்து உதைத்த கணவன்... சகோதரருடன் சேர்ந்து கொலை செய்த மனைவி : மும்பையில் 'பகீர்' சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள பிவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சவிதா. இவரது கணவர் சஞ்சய். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் சவிதாவின் சகோதரர் அக்ஷய் சம்பவத்தன்று சகோதரியின் வீட்டிற்குச் வந்துள்ளார். அப்போது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சஞ்சய் மனைவியை அடித்துக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சஞ்சயை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் சஞ்சய் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரி சவிதா கணவரின் கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார். அப்போது அக்ஷயும் அவரது பிடியிலிருந்து நழுவி சஞ்சய் கழுத்தை நெரித்துள்ளார்.

இதில் மூக்சு விட முடியாமல், சஞ்சய் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் சஞ்சய் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கணவனைக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories