இந்தியா

கிரண் பேடி சிறப்பு அதிகாரம் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கிரண் பேடி அதிகாரம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புள்ளனர்.

கிரண் பேடி சிறப்பு அதிகாரம் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கான சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை, ரத்து செய்யக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்தது.

banner

Related Stories

Related Stories