தி.மு.க

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க போட்டியிடும் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

விக்கிரவாண்டியில் தி.மு.க.வும், நாங்குநேரிமற்றும் புதுவையில் காங்கிரசும் போட்டியிடும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க போட்டியிடும் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, “தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.” என அறிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, குமரி அனந்தன், கே.வி. தங்கபாலு, போபண்ணா உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விக்கிரவாண்டியில் தி.மு.க.வும், நாங்குநேரிமற்றும் புதுவையில் காங்கிரசும் போட்டியிடும் எனத் தெரிவித்தார். மேலும், தி.மு.க சார்பில் நாளை மறுநாள் ( 23ம் தேதி ) விருப்பமனு பெறப்படும்.

மனுக்கள் பெற்ற மறுநாளில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி, பிரச்சாரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories