தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 957 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,16,132 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 64,413 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,37,49,877 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,24,958 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 81 பேருக்கும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 47 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை வந்த ஒருவருக்கு உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று இருப்பது புனேவில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 1,065 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 95 ஆயிரத்து 293 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 12 பேர் உயிரிழந்தனர். அதில், 6 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 6 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,092 ஆக அதிகரித்துள்ளது.