Corona Virus

தமிழகத்தில் 1,066 பேருக்கு கொரோனா உறுதி... மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,10,080 ஆக அதிகரிப்பு! #Covid19

தமிழகத்தில் இன்று 1,066 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் 1,066 பேருக்கு கொரோனா உறுதி... மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,10,080 ஆக அதிகரிப்பு! #Covid19
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,066 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,10,080 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 70,534 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,33,58,824 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 302 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,23,209 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 109 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 1,131 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 88 ஆயிரத்து 742 ஆக உள்ளது. தற்போது 9,314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 12 பேர் உயிரிழந்தனர். அதில், 4 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,024 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories